

தேவையானவை:
பால் - 1 லிட்டர்
பச்சரிசி - அரைகிண்ணம்
பயத்தம் பருப்பு - 2 கைப்பிடி
வெல்லம் (பொடித்தது) - 1 கிண்ணம்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்,முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் 20 நிமிடம் ஊற விடவும். தண்ணீரை வடித்து விட்டு பால் சேர்த்து வேக வைக்கவும். அரிசி நன்கு வெந்தவுடன் வெல்லத்தை தூளாக்கி சேர்க்கவும். நன்கு கலந்து, வெல்லம் கரைந்ததும் நெய் ஊற்றி நன்கு கிளறவும். பின் இறக்கி வைத்து முந்திரி, திராட்சை இவற்றை நெய்யில் பொறித்து சேர்க்கவும். முழங்கை வரை நெய் வழிந்தால் அதுதான் அக்கார அடிசில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.