ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மருதாணியின் மகத்துவம்!

மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவ தலைவலி நீங்கும்.

News image
Updated On :8 அக்டோபர் 2021, 12:34 pm

அமுதா அசோக் ராஜா

மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவ தலைவலி நீங்கும்.

பெண்கள் நகத்தில் அரைத்துப் பூசுவது அழகுக்கு மட்டுமின்றி, உடல் வெப்பத்தைத் தணிக்கவும், நோய்க் கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது.

பூக்களை நீரிலிட்டுக் காய்ச்சி கஷாய மாக்கி வடிகட்டி தலைக்குக் குளித்தால் தலைவலி நீங்கும்.

மருதாணி இலையின் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சித் தேய்த்துவர இளநரை நீங்கி தலைச் சூடு குறைந்து தலைமுடி. செழித்தும், நீண்டும், செம்பட்டையின்றியும் வளரும்.

இலைகளை எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து கை, கால், மூட்டு வலி, கீழ்வாத வலியின் போது தேய்க்க நல்ல குணம் தெரியும்.

ஒரு கைப்பிடி மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து கால் பாதத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ பாத எரிச்சல் நீங்கும். பாதமும் மென்மையாக இருக்கும்.

ஒரு கைப்பிடி இலைகளோடு 1 தண்டு விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் இரவில் தடவி, காலையில் கழுவி வர, நமைச்சல், ஊறல் படிப்படியாகக் குறையும்.

இலைகளை அரைத்து நீண்ட நாள் ஆறாத புண் மீது வைத்துக் கட்ட விரைவில் ஆறும்.

ஒரு கைப்பிடி இலையை மஞ்சள், வசம்பு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து கால் ஆணிமேல் வைத்து வெற்றிலை வைத்து கட்டிவர 15 நாட்களில் கால் ஆணி மறையும்.

மருதாணிப் பூக்களை (புதியவை) தலையணையின் அடியில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

மருதாணியின் உலர்ந்த விதைகளை சாம்பிராணியுடன் சேர்த்து தணலில் புகையவிட்டால், பில்லி, சூன்யம், ஏவல், கண் திருஷ்டி நீங்கும். கொசு, விஷப் பூச்சிகள் அண்டாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.