கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பஜ்ஜி சுவையாக இருக்க..

துவரம் பருப்பை  வேக வைக்கும்போது  ஒரு தேக்கரண்டி  வெந்தயத்தைச் சேர்த்து  வேக வைத்தால் பருப்பு  சீக்கிரம்  வெந்துவிடும்.

News image
Updated On :8 அக்டோபர் 2021, 6:01 pm IST

.

துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு , கத்திரிக்காய் போன்றவற்றில் பஜ்ஜி செய்யப் போகிறீர்களா? காய்களை வில்லைகளாக நறுக்கி ஒருவில்லையின் மேல் ஏதாவது ஊறுகாய் விழுதை தடவிவிட்டு அதன்மேல் இன்னொரு வில்லையை வைத்து மூடி பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.

வடை, பஜ்ஜி, போண்டா, தோசை, அடை போன்றவை மொறு மொறுப்பாக வர வேண்டுமா? ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து, பொடித்து அதை இரண்டு தேக்கரண்டி எடுத்து மாவுடன் கலந்து செய்தால் மொறுமொறுப்பாக வரும்.

மெதுவடைக்கு அரைத்த மாவின் பதம் சரியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அரைத்த மாவைச் சிறிதளவு உருட்டிப் போட்டால் மேலே மிதந்து வரும். இதுவே சரியான பதம்.

குலோப்ஜாமூனுக்கு பாகு செய்து இறக்கும்போது, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கலந்து இறக்கினால் பாகு சீக்கிரம் கெட்டுப் போகாது. கூடுதல் சுவையாக இருக்கும்.

சேமியா உப்புமாவின் சுவையைக் கூட்ட உப்பு சேர்த்து இறக்குவதற்கு முன்னால் அரை மூடி எலுமிச்சைச்சாறு அல்லது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்க்கலாம்.

சேனைக்கிழங்கை வேக வைக்கும்போது சிறிதளவு புளித் தண்ணீர் ஊற்றி வேக வைத்து சமைத்து சாப்பிட்டால் நாக்கு அரிக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.