பால் பொங்கும்போது அதை அடக்குவதற்கு சில துளிகள் குளிர்ந்த நீரை தெளிக்கவும்.
பால் பொங்காமல் இருக்க பால் சட்டியில் சிறிய சில்வர் தட்டை போட்டலாம். பால் காய்ச்சும் பாத்திரத்தை இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் காய வைக்க வேண்டும்.
தினமும் ஒரே பாத்திரத்தில் பாலைக் காய்ச்சாமல் இரண்டு பாத்திரங்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம்.
பாலைக் காய்ச்சும் முன் பாத்திரத்தில் நீர் ஊற்றி சிறிது கொதிக்க வைத்து, அந்த நீரை ஊற்றியதும் பால் காய்ச்சினால் பால் கெடாது.
பால் பாக்கெட்டை பிரிஜ்ஜில் வைத்து, பாலை காய்ச்சும் முன் குளிர் கொஞ்சம் குறைந்தவுடன் காய்ச்சினால் கெடாது.
ப்ரிஜ் இல்லாதவர்கள் தண்ணீர் ஊற்றிய டப்பிக்குள் பால் உள்ள பாத்திரத்தையோ, பக்கெட்டையோ வைக்கவேண்டும்.