மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தேங்காய்ப் பால் இனிப்பு பூரி

தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி, 2 சிட்டிகை உப்பு. தேங்காய்ப் பால் ஆகியவற்றைக் கலந்து பிசைந்து கொள்ளவும்.

News image
Updated On :23 மார்ச் 2022, 12:30 am


தேவையானவை:

மைதா மாவு - அரை கிலோ
தேங்காய் - 1
முந்திரிப் பருப்பு - 20
நெய் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - 400 கிராம்
கடலை எண்ணெய் - 400 கிராம்
ஏலக்காய் - 8
ஜிலேபி பவுடர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி, 2 சிட்டிகை உப்பு. தேங்காய்ப் பால் ஆகியவற்றைக் கலந்து பிசைந்து கொள்ளவும். ஏலக்காய், முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து எடுத்து பொடி செய்து பிசைந்த மாவுடன் கலந்து கொள்ளவும். மீதமுள்ள நெய்யையும் மாவில் ஊற்றிப் பிசைந்து சிறு சிறு பூரிகளாக வட்டமாகத் தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தட்டி வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு சர்க்கரையை அதில் கொட்டி பாகு போல் காய்ச்ச வேண்டும். பாகு கம்பிப் பதத்தில் வரும் பொழுது, ஜிலேபி பவுடரை அதில் தூவிக் கிளற வேண்டும். அதில் பொரித்து வைத்துள்ள பூரிகளைப் போட்டு பாகு சுற்றிலும் படும்படி நன்றாகக் கிளறிவிட வேண்டும். இந்தப் பூரிகளை ஒரு தட்டில் எடுத்துப் போட்டு ஆற விட வேண்டும். இதுவே தேங்காய்ப் பால் இனிப்பு பூரிஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.