ஜப்பானில் உள்ள எக்கின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அண்ணாமலை சுப்ரமணியம் டோயோட்டோ ஃ பவுண்டேஷன் உதவியுடன் மேற்கொண்ட ஆய்வில், தாய்ப்பாலில் டிடிடி போன்ற பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னை பெருங்குடி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தாய்மார்களின் தாய்ப்பாலை எடுத்துப் பரிசோதித்தில் அதில் எச்.சி.எச், டிடிடி, பி.சி.பி. போன்ற ஆர்கனோ குளோரின் பூச்சிக் கொல்லி மருந்துகளின் துளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற இடங்களை ஒப்பிடும்போது சென்னை தாய்மார்களின் தாய்ப்பாலில் பூச்சிக் கொல்லி மருந்தான எச்.சி.எச். அளவு, கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது.