/

தக்காளி புலாவ் 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:14 am

லோ. சித்ரா

தேவையான பொருள்கள்

பாஸ்மதி அரிசி- 1 கிண்ணம்
வெங்காயம்- 1
தக்காளி- 3
இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக் கரண்டி
பச்சை மிளகாய்- 2
புதினா- 1 கைப்பிடி
மல்லித் தழை- 1 கைப்பிடி
மிளகாய்த் தூள்- அரை தேக்கரண்டி
தேங்காய்ப் பால்- அரை தேக்கரண்டி
உப்பு-  தேவையான அளவு
நெய்- 1 மேசைக் கரண்டி
எண்ணெய்- 2 மேசைக் கரண்டி
பட்டை-2 
வெங்காயம்- 2 மேசைக் கரண்டி
ஏலக்காய்- 2 மேசைக் கரண்டி

செய்முறை: 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். அரிசி, தேங்காய் பாலுடன் ஒன்றே கால் கிண்ணம் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள். எண்ணெய், நெய் காய வைத்து, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்குங்கள். பிறகு ஊற வைத்த அரிசியை தண்ணீர் தேங்காய்ப் பால் கலவையோடு சேர்த்து ஊற்றுங்கள். மேலும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்குங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.