ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வீட்டுக் குறிப்புகள்...

அடைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து, மெல்லிய அடைகளாக வார்க்க வேண்டும். மிதமான புதினா வாசனையில் மிகவும் சுவையாக இருக்கும்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 12:30 am

தினமணி


அடைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து, மெல்லிய அடைகளாக வார்க்க வேண்டும். மிதமான புதினா வாசனையில் மிகவும் சுவையாக இருக்கும்.

சாம்பார் செய்ய துவரம் பருப்பு மட்டும் பயன்படுத்தாமல், சம அளவு பாசிப் பருப்பை சேர்த்து பயன்படுத்தினால் சாம்பார் சுவையாக இருக்கும்.

அவலை நீர் சேர்த்து ஊறவைக்கும்போது கொஞ்சம் மோர் சேர்த்துக் கொண்டால் கார அவல் டிஷ் சுவை இரு மடங்காகும். எளிதில் ஜீரணமாகும்.

பாகற்காய் கூட்டு, குழம்பு செய்யும்போது அரை டம்ளர் தேங்காய் பால் சேர்த்து கொண்டால் கசப்புநீங்கும்.

சமைத்த பாத்திரத்தில் இருந்து நேரடியாக உணவை உண்ணக் கூடாது.

தலை பாரமாக இருக்கிறதா? நொச்சி இலையை உப்பு போட்டு வதக்கி, இளஞ்சூட்டுடன் நெற்றியில் புற்றுபோல் போட்டுக் கொண்டால், உடனே சரியாகிவிடும்.

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு மார்புச் சளி கட்டிக் கொள்ளும். இதற்கு துளசி கஷாயம் கொடுத்தால் ஆரோக்கியம் அடையலாம்.

பாதாம், பிஸ்தா போன்றவற்றை பிளாஸ்டிக்  டப்பிகளில் போட்டு வைப்பதற்குப் பதிலாக, கண்ணாடி ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து குலுக்கி வைத்தால் நீண்ட நாள்களுக்குத் தடித்து போகாது.

தொகுப்பு : உ.ராமநாதன், ஆர்.கே.லிங்கேசன், பத்மஜா, அ.ப.ஜெயபால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.