/

ஆன்மிகக் குறிப்புகள்..

கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி  ஆகிய 7 புண்ணிய நதிகளை மனதில் நினைத்துகொண்டு குளித்தால் புண்ணியம் கிடைக்கும்.

Updated On :8 ஏப்ரல் 2023, 6:30 pm

கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி  ஆகிய 7 புண்ணிய நதிகளை மனதில் நினைத்துகொண்டு குளித்தால் புண்ணியம் கிடைக்கும். குளிக்கும் நேரத்தில் எந்தவித சிந்தனையும் வராமல் இருக்க வேண்டும். இதனால் தண்ணீரின் குளிர்ச்சி மனதில் உணரப்பட்டு, உடலும் மனமும் குளிர்ச்சியாகிறது.

விநாயகருக்கு அர்ச்சனை செய்ய உகந்த பூக்கள்: அரளி, எருக்கு, ஊமத்தை, கொன்றை செவ்வந்தி, செண்பகம், செங்கழுநீர்ப் பூ, தாழம்பூ, தும்பை, பாதிரி, மந்தாரை, மல்லி, மாம்பூ, வில் புஷ்பம், வெள்ளரளி, ஜாதி மல்லி. உகந்த இலைகள்: அருகம்புல், அரளி இலை, அரசு, இலந்தை இலை, ஊமத்தை, கண்டங்கத்திரி, கரிசலாங்கண்ணி, நாயுருவி, நெல்லி, நொச்சி, பவழமல்லி, மருக்கொழுந்து, மாவிலை, வில்வதனம், வெள்ளருக்கு, வெண்மருதை, வன்னி, மாசிப்பச்சை, விஷ்ணுகிராந்தி, ஜாதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.