/

வரகரசி தேங்காய் ரொட்டி

வாயகன்ற பாத்திரத்தில் வரகரிசி மாவு, கொத்துமல்லித் தழை, தேங்காய்த் துண்டுகள், வெங்காயம், உப்பு, சீரகம் சேர்தது இளஞ்சூடான தண்ணீர் சேர்த்து கலந்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

லோ. சித்ரா

தேவையானவை:

வரகசிரி மாவு- 2 கிண்ணம்
கொத்துமல்லித் தழை- 1 கிண்ணம் (நறுக்கியது)
தேங்காய்த் துண்டுகள்- கால் கிண்ணம் (நறுக்கியது)
நறுக்கிய வெங்காயம்- கால் கிண்ணம்
சீரகம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

வாயகன்ற பாத்திரத்தில் வரகரிசி மாவு, கொத்துமல்லித் தழை, தேங்காய்த் துண்டுகள், வெங்காயம், உப்பு, சீரகம் சேர்தது இளஞ்சூடான தண்ணீர் சேர்த்து கலந்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை உருண்டையாக உருட்டி, வாழை இலையால் சற்று கனமாகத் திரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். சுவையான இஞ்சி, புளி, சட்னியுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.