எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குழந்தைகள் பராமரிப்பு..!

குழந்தைகளின் சருமம் பொதுவாகவே மிக, மிக மிருதுவாக இருக்கும். அதுவும் இரண்டு வயது வரை சென்சிடிவாகவும் இருக்கும்.

News image
Updated On :7 ஜனவரி 2023, 5:16 pm

குழந்தைகளின் சருமம் பொதுவாகவே மிக, மிக மிருதுவாக இருக்கும். அதுவும் இரண்டு வயது வரை சென்சிடிவாகவும் இருக்கும். சின்ன கொசு, எறும்பு கடித்தாலும் சிகப்பான திட்டுகள் வரும். சில குழந்தைகளுக்கு அதனால் அலர்ஜியும் வர வாய்ப்பு உள்ளது.  இப்படிபட்ட அவர்களின் சருமம் இந்தக் குளிர் காலத்தில் மேலும் வறண்டு போகும். எனவே, இந்தப் பருவத்தில் குழந்தைகளின் சருமத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் சருமப் பாதுகாப்பு என்பதும் முக்கியம்.

குழந்தைகளுக்கு கட்டாயமாக  ஆயில் மசாஜ்   செய்த பிறகே குளிக்க வைக்க வேண்டும்.  

உடலுக்குத் தேவையான ஒமேகா அமிலம் ஆலிவ், பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கிடைக்கும்.

 பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ, இ அதிகம் உள்ளது.

ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைக் கால்களில், முட்டி முதல் பாதம் வரை நன்றாகத் தடவி 10 நிமிடங்கள் ஊறவிட்டு குளிக்க வைக்கவும். இதனால்அரிப்பு, சிரங்கு போவதுடன், குளிர்க்காலத்தில் வரும் கருமையும் மறைந்து சருமம் இயற்கை நிறத்தை பெறும்.

பாசிப்பருப்பையும், கடலைமாவையும் சம அளவு எடுத்து, அதனுடன் சிறிதளவு வெந்தயத்துடன் வெயிலில் நன்கு காயவைத்து, மிஷினில் நைசாக அரைக்கவும். இந்த பொடியை தண்ணீர் கொண்டு குழைத்து தினமும் குழந்தைகளை குளிக்க வைத்தால் சரும வறட்சி இருக்காது.

வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு சூடான பாலில் கடலை மாவைக் குழைத்து,  நன்கு ஆறியபின் அந்தக் கலவையை உடல் முழுவதும் தடவி, வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால் சருமம் மென்மையாகும்.

கை, கால்களில் தோல் அதிகப்படியாக வறண்டு, லேசாக நகம் பட்டுக் கீறினால்கூட, வெள்ளைக் கோடுகளாக சில குழந்தைகளுக்கு தெரியும். அதை போக்க பால் ஏடில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயை விட்டு, நன்றாக அரைத்தே கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் தடவி சிறிது நேரம் கழித்து, குளியல் பொடி போட்டுக் குளிக்கப்பாட்ட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.