47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோலி புலாவ் (பஞ்சாப்)

கடலை மாவுடன் திட்டமாக நீர், உப்பு சேர்த்து,  கரைத்து வைக்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தாவை கரகரப்பாக அரைக்கவும்.

News image
Updated On :22 ஜனவரி 2023, 12:30 am

ந.கிருஷ்ணவேணி

தேவையான அளவு:

பாதாம், முந்திரி, பிஸ்தா- தலா 10
சர்க்கரை போடாத கோவா- கால் கிண்ணம்
பச்சை மிளகாய்- 2
கடலை மாவு- அரை கிண்ணம்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
உதிரியான பாசுமதி சாதம்- 1 கிண்ணம்
நெய்- 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது- 2 மேசைக்கரண்டி
கரம் மசாலா- 2 மேசைக்கரண்டி

செய்முறை: 

கடலை மாவுடன் திட்டமாக நீர், உப்பு சேர்த்து,  கரைத்து வைக்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தாவை கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் கோவா, உப்பு, பொடியாக அரிந்த பச்சை மிளகாய் சேர்த்து கலந்து உருண்டையாகக் கலக்கவும். கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கடாயில் நெய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா சேர்த்து பிரட்டவும். பாசுமதி சாதம், உருண்டையாகச் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.