

தேவையானவை:
சுண்டைக்காய் 1 ஆழாக்கு
துவரம் பருப்பு கால் ஆழாக்கு
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சை மிளகாய் 3
சாம்பார் பொடி முக்கால் மேசைக்
கரண்டி
புளி கொட்டை பாக்கு அளவு
உப்பு, கடுகு, அரை மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு அரை மேசைக்
கரண்டி
எண்ணெய் கால் மேசைக்கரண்டி
செய்முறை:
சுண்டைக்காயை கழுவி காம்பை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை முக்கால் பதத்தில் வைத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் சுண்டைக்காய் தக்காளி போட்டு வதக்கி வேக வைத்த பருப்பு, சாம்பார் பொடி, உப்பு சேர்க்கவும். புளியைக் கரைத்துவிட்டு வெந்து கெட்டியானவுடன் இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.