திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

முருங்கைக் கீரைப் பொடி

நெய்யை வாணலியில் விட்டு அடுப்பில் வைத்து உருகியவுடன் முருங்கை இலைகளை அதில் போட்டு முறுகலாக வறுத்து எடுக்க வேண்டும். 

News image
Updated On :17 ஜூன் 2023, 4:21 pm

தேவையானவை:

துவரம் பருப்பு 200 கிராம்
கடலைப் பருப்பு 50 கிராம்
முருங்கை இலை 1 கிண்ணம்
உளுந்து  50 கிராம்
மிளகாய் வத்தல்    10
பெருங்காயம் 1 தேக்கரண்டி
உப்பு, நெய் தேவையானவை

செய்முறை: 

நெய்யை வாணலியில் விட்டு அடுப்பில் வைத்து உருகியவுடன் முருங்கை இலைகளை அதில் போட்டு முறுகலாக வறுத்து எடுக்க வேண்டும். 

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து, மிளகாய் வத்தல், பெருங்காயத்தை வாணலியில் தனித்தனியாக வறுத்தெடுத்து பிறகு மிக்ஸியில் பொடி செய்து, கூடவே உப்பையும் போட்டு பொடி செய்து எடுக்க வேண்டும். சாதத்தில் நெய்விட்டு இந்தப் பொடில் ஒரு கரண்டி கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். உடலுக்கு சத்தான இருப்புச் சத்தினால் உடலில் ரத்தமும் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.