முழுப் பயிறு அடை

புழுங்கலரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, களைந்து நீரை வடித்து இஞ்சி, மிளகாய் வற்றல் சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.  
முழுப் பயிறு அடை

தேவையானவை:

புழுங்கல் அரிசி- 300 கிராம்
முழுப் பயிறு- 200 கிராம்
முளைக் கட்டிய கொண்டைக் கடலை- 200 கிராம்
இஞ்சி- 1 துண்டு
பீர்க்கங்காய்- 1
காய்ந்த மிளகாய்-6
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

புழுங்கலரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, களைந்து நீரை வடித்து இஞ்சி, மிளகாய் வற்றல் சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.  முளைகட்டிய பாசிப்பயறு, கொண்ட கடலையைத் தனியாக அரைத்து மாவுடன் சேர்த்து பீர்க்கங்காய் நறுக்கிய துண்டுகளையும் போட்டு உப்பு சேர்த்து கலந்து அடுப்பில் தோசைக்கல்லை வைக்க வேண்டும்.  அதில், மாவை பரவலாக விட்டு இருபுறமும் எண்ணெய்விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com