எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சமையல் குறிப்புகள்...

ரைஸ் குக்கரில் வைத்த சாதம் குழைந்துவிட்டால் அதன் மேல் ஒரு ரொட்டியை வைத்து மேலும் இரண்டு நிமிடங்கள் சூடுபடுத்தினால், ரொட்டி அதிகப்படியான ஈரப் பதத்தை உறிஞ்சி, சாதத்தை பொலபொலவென்று ஆகிவிடும்.

News image
Updated On :25 நவம்பர் 2023, 6:30 pm

தினமணி


ரைஸ் குக்கரில் வைத்த சாதம் குழைந்துவிட்டால் அதன் மேல் ஒரு ரொட்டியை வைத்து மேலும் இரண்டு நிமிடங்கள் சூடுபடுத்தினால், ரொட்டி அதிகப்படியான ஈரப் பதத்தை உறிஞ்சி, சாதத்தை பொலபொலவென்று ஆகிவிடும்.

பொறித்த அப்பளம் காகிதம் போல் ஆகிவிட்டால், அதனை மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க மொறுமொறு என நன்றாக இருக்கும்.

தட்டை செய்யும்போது கடலைப் பருப்புக்கு பதிலாக ஒரு டம்ளர் கொள்ளு பயிறை ஊற வைத்து அரைத்து தட்டை செய்தால் சுவையாக இருக்கும்.

வாழைக்காயை பயன்படுத்தியதும் அதன் தோலை வீணாக்காமல் வேக வைத்து துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் அல்சர் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும்.

அடை செய்யும் போது பச்சரிசிக்கு பதிலாக  கோதுமை ரவையை போட்டு ஊறவைத்து செய்தால் தனி சுவையுடன் இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.

-செளமியா சுப்ரமணியன்,
பல்லாவரம்.

சூப் செய்யும்போது ஒரு துண்டு வெங்காயம் சிறிது கடுகை நெய்யில் வறுத்து சேர்க்க, சூப் வாசனையுடன் இருக்கும்.

வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது, அரை தேக்கரண்டி தயிர் சேர்த்தால் நெய் கமகமவென்று இருக்கும்.

உப்பு ஜாடியில் ஈரம் கசிந்தால், ஜாடிக்குள் சிறிது அரிசியை உப்புடன் கலந்து வைத்தால் ஈரக்கசிவு இருக்காது.

-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.