வீட்டு அறைகளில் துர்நாற்றம் வீசினால், சில நெருப்புக் குச்சிகளைக் கொளுத்தி கையில் பிடித்துகொண்டால் போதும். துர்நாற்றம் போய்விடும்.
ஸ்க்ரூடிரைவர், ஆணிகள், கத்திரிக்கோல் சாமான்கள் வைத்திருக்கும் டப்பாவில் ஒறு பெரிய கற்பூரவல்லியைப் போட்டு வைத்தால், அந்தச் சாமான்கள் துரு பிடிக்காது.
குக்கரில் ரப்பர் வளையம் தளர்ந்துவிட்டால் அதை ஃப்ரிட்ஜிலோ, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையிலோ சில நாள்கள் வைத்து உபயோகப்படுத்தினால் பழைய நிலையை போன்று இறுக்கமாகிவிடும்.
சில பெண்களுக்கு நெற்றியில் குங்குமம் இடுவதால், அந்த இடம் கறுப்பாகிவிடும். அந்தத் தழும்பு மறைய அந்த இடத்தில் வில்வ மரக்கட்டையை அரைத்து பூசினால் சரியாகிவிடும்.
சிறிய கடுகை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்து, அதில் பாத்திரம் தேய்த்தால் கறை மறையும்.
இட்லி, தோசை மாவுப் பாத்திரத்தில் ஓட்டிக் கொண்டிருக்கும் மாவினால் எவர்ஃசில்வர் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரங்கள் பளபளவென்று இருக்கும்.
வெந்தயக் குழம்பு செய்யும்போது இரண்டு சிட்டிகைப் பருப்புப் பொடியை போட்டால் குழம்பு மணமாய் இருக்கும்.