

தேவையான பொருள்கள்:
வேர்க்கடலைப் பருப்பு 100 கிராம்
துவரம் பருப்பு 50 கிராம்
கத்தரிக்காய் 3
தக்காளி 1
மிளகாய் வற்றல் 7
தனியா 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
வெந்தயம் அரை தேக்கரண்டி
கசகசா 1 தேக்கரண்டி
மிளகு 5
தேங்காய்த் துருவல் 1 மூடி
புளி நெல்லிக்காய் அளவு
மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
கடுகு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலைப் பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறபோட்டு வேக வைத்துகொள்ள வேண்டும். புளியை அரை டம்ளர் நீரில் நனைக்க வேண்டும். மசாலா சாமான்களை எண்ணெய்விட்டு கருகாமல் வறுக்க வேண்டும். அதனுடன் ஒரு பகுதி தேங்காய்த் துருவல் கலந்து வெந்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். பருப்பை வேக வைத்துகொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்துகொண்டு அதில் கத்திரிக்காய், தக்காளிகளைப் போட்டு வேகவிட வேண்டும். நன்றாக வெந்ததும் அதில் புளியைக் கரைத்துவிட வேண்டும். கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வெந்த பருப்பை போட்டு கொதித்தவுடன் கீழே இறக்கி மீதமுள்ள தேங்காய்த் துருவலை எண்ணெய்விட்டு வறுத்துப் போட்டு கலக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.