தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

சமையல் பாத்திரங்களின் பயன்கள்..

வீடுகளில் சமைப்பதற்கு இரும்பு, வெண்கலம்,  ஈயம், அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் / எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்கள், மண் பானைகள் என பலவகை பாத்திரங்கள் உள்ளன.  

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:47 pm IST

வீடுகளில் சமைப்பதற்கு இரும்பு, வெண்கலம், ஈயம், அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் / எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்கள், மண் பானைகள் என பலவகை பாத்திரங்கள் உள்ளன. ஆனால் எந்தப் பாத்திரத்தில் சமைத்தால், நமக்கு முழு சத்தும் கிடைக்கும் என தெரிந்து சமைக்க வேண்டும்.

இரும்பு

இரும்புப் பாத்திரத்தில் சமைப்பதால் ஒரே இடத்தில் சூடு பிடிக்காமல் எல்லா இடங்களிலும் சமமாகச் சூடு பரவும். அதிக நேரம் சாப்பாடு சூடாக இருக்கும். அதிலுள்ள இரும்புச் சத்து சாப்பாட்டில் சேருவதால், உடலில் இரும்புச் சத்து சேர்ந்து ரத்தச் சோகையை நோய் வராமல் தடுக்கும்.

ஆனால், இரும்புப் பாத்திரத்தில் வாழைக்காய், துவர்ப்புக் காய்கறிகளை சமைக்கவே கூடாது. அதிலும் துரு பிடித்த இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது மிகவும் ஆபத்தானது.

வெண்கலம்

வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் சோர்வு நீக்கி புத்துணர்ச்சி உண்டாகும். ஆனால், பாத்திரங்கள் பச்சை நிறமாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பச்சை நிறம்படிந்த பாத்திரத்தில் சமைத்தால் சாப்பாடு விஷமாகிவிடும். அதனை தவிர்க்க, வெண்கலப் பாத்திரத்தில் சமைத்தவுடன் அதனை நன்கு கழுவி வெயிலில் காய வைத்து அதன் பிறகே மீண்டும் உபயோகிக்க வேண்டும்.

ஈயம்

ஈய பாத்திரத்தில் ரசம் வைத்து சாப்பிடுவது அலாதி சுவைதான். தற்போது உள்ள ஈய பாத்திரங்களை உண்மையான ஈயம் பூசியதா அல்லது கலப்படமா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

அலுமினியம்

அலுமினியம் நம் உடலில் சேர்வதால், அலுமினியம் உடலில் படிந்து தோல் நோய், சிறுநீரகக் கோளாறு ஏற்படும். ஆனால் அலுமினியத்தில் சமைத்த உடனேயே வேறொரு பாத்திரத்துக்கு உணவை மாற்றிவிட்டால் இந்தக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் / எவர்சில்வர்

எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கும்பொழுது அது “FOOD GRADE STAINLESS STEEL”  வினால் ஆனதா என்பதை மட்டும் சரிபார்த்து வாங்க வேண்டும்.

நான்ஸ்டிக் பாத்திரங்கள்

எண்ணெய் விடாமல் உணவுகளை செய்யலாம் தோசை சுடலாம் என்று பலரும் நான் ஸ்டிக் பாத்திரங்களை வாங்குகிறார்கள். இந்தப் அதிக சூடானால் அதில் உள்ள டெஃப்லான் “பஉஊகஞச”• அதிகமாக சூடாக்கப்படாமல் நான் ஸ்டிக் தவாவில் சாப்பாடு தயாரிக்கலாம். மேலும் நான் ஸ்டிக்கில் கீரல்கள் விழாமல், கோட்டிங் போகாமல் இருக்கும் வரை, அதனை பயன்படுத்துவது சிறந்தது.

மண் பானை

மண் பானையில் சமைப்பதால், மிகுந்த ருசியோடும், உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாகவும் இருக்கும். மண் பானையில் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாது பொருள்கள் நிறைந்துள்ளன. மண்பானையை வாங்கவும் அதில் தினமும் சமைத்து, உண்டால், ஆரோக்கியத்துடன் வாழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.