நெய்யுடன் வெள்ளை வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
கீழாநெல்லி வயோதிகக் குறைபாடுகளை நீக்கும்.
பாதாம் பருப்பு கண் பார்வையை மேம்படுத்தும்.
நாயுருவி இலை தேமல், படையைக் குணமாக்கும்.
திரிகடுகப் பொடி மூச்சுத்திணறலைக் குணமாக்கும்.
சிறுகுறிஞ்சா வேரின் பொடி கஷாயம் காய்ச்சலைக் குணமாக்கும்.
பாகல் இலைச்சாறு வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும்.
மகிழம்பட்டை கஷாயம் வாய்ப்புண்களைக் குணமாக்கும்.
துளசி இலை இதய நோயைப் போக்கும்.
நத்தைச் சூரி இலைச்சாறு சளியைப் போக்கும்.
நன்னாரி வேர் ஊறவைத்தத் தண்ணீர் நீரிழிவு நோயைக் குணமாக்கும்.
மகிழம்பூ கஷாயம் உடலை வலிமையாக்கும்.
சுண்டைக்காய் கபத்தைப் போக்கும்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
ஆவாரம் பூவை மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், சிறுநீர் கடுப்பு நீங்கும்.
-உ.ராமநாதன், நாகர்கோவில்.