உருளைக்கிழங்கை பொரிக்கும் முன்பு சிறிது பயத்தம் மாவை உருளைக்கிழங்கு மீது தெளித்தால், பொரியல் மொரமொரப்பாக இருக்கும். -ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ரசத்துடன் இரண்டு துண்டு அன்னாசிப்பழம் நறுக்கிப் போட்டு வேகவைக்கும்போது, மிகவும் சுவையாக இருக்கும். -விமலா சடையப்பன், காளனம்பட்டி.
காளான் உணவுகளைத் தயாரித்த நான்கு மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். மறுநாள் சாப்பிட்டாலோ, சூடுபடுத்திச் சாப்பிட்டாலோ காளானிலுள்ள புரதம் சிதைந்து, இதயத்தைப் பாதிக்கும்.
பீட்ரூட் கறி வகைகளைச் சமைத்தவுடன் மீண்டும் சூடுபடுத்தினால், சத்துகள் அழிந்துவிடும். வயிற்று உபாதைகள் ஏற்படும்.
கீரை உணவுகளை மறுபடியும் சூடுபடுத்தினால், கீரையிலுள்ள நைட்ரஜன் சத்து சிதைந்து நஞ்சாகிவிடும். இதனால் குடல் புற்றுநோய் ஏற்படும்.
பசு வெண்ணெயில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், பார்வை குறைபாடு, கண் நோய் நீங்கும்.
காசநோயால் அவதிப்படுவர்களுக்கு வெண்ணெய் மிகவும் நல்லது.
வெண்ணயில் அடங்கியுள்ள கால்சியம் சத்தானது எலும்பு, பற்களுக்கு வலு சேர்க்கிறது. வயோதிகத்தால் வரக் கூடிய எலும்பு நோய்களை வராமல் தடுக்க உதவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.