தேவையான பொருள்கள்:
பழுத்த மாம்பழங்கள் - 6
அரிசி- அரை கிலோ
நெய், சர்க்கரை - தலா 250 கிராம்
முந்திரிப் பருப்பு, திராட்சை -தலா 20
ஏலக்காய்த் தூள்- 2 தேக்கரண்டி
செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் வேகவைத்து வடித்துக்கொள்ள வேண்டும். திராட்சை, முந்திரி ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு மாம்பழத்தைச் சாறு பிழிந்து, சர்க்கரையுடன் ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, திராட்சையையும் சேர்த்து, வடித்த சாதத்துடன் நெய்விட்டுக் கலந்து மேலும் கீழுமாக ஒன்றாகக் கிளறி இறக்கவேண்டும்.
ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




