
ஒரு முறை மகாத்மா காந்திஜியைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அப்போது அவர், காந்திஜியிடம், "ஐயா, இந்த உலகத்தில் மன்னிக்க முடியாத பாவங்கள் என்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்' என்று கேட்டார்.
காந்திஜி புன்முறுவலுடன், "ஒரே ஒரு பாவம் என்று நான் கூறமாட்டேன். மொத்தம் ஏழு பாவங்கள் உள்ளன. அவை - கொள்கைப் பிடிப்பு எதுவுமில்லாத அரசியல் ஒரு பாவம். நேர்மை எதுவுமில்லாத வியாபாரம் ஒரு பாவம்.
ஒழுக்கம் இல்லாத கல்வி ஒரு பாவம். பெற்றோர் மற்றும் குருவை மதிக்காமலிருப்பது ஒரு பாவம். மனச்சாட்சி இல்லாத இன்பம் ஒரு பாவம். மனிதாபிமானம் எதுவுமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம். தியாகம் இல்லாத இறைவழிபாடு ஒரு பாவம் ஆகும்!' என்று கூறி முடித்தார். வந்தவர் திருப்தியுடன் எழுந்து சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.