பொன்மொழிகள்
1. தீய வழியில் தேடிய செல்வம், செல்வாக்கு, மதிப்பு இவை மிதக்கும் மேகங்கள் போன்றவை. -கன்ஃபூசியஸ் 2. உனக்கு மற்றவர்கள் எதைச் செய்யக்கூடாதென்று எதிர்பார்க்கிறாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே! -டா


1. தீய வழியில் தேடிய செல்வம், செல்வாக்கு, மதிப்பு இவை மிதக்கும் மேகங்கள் போன்றவை.
-கன்ஃபூசியஸ்
2. உனக்கு மற்றவர்கள் எதைச் செய்யக்கூடாதென்று எதிர்பார்க்கிறாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே!
-டால்ஸ்டாய்
3. நேர்மை என்பது, செய்யும் செயலைப் பொறுத்தது. உண்மையைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மை ஆகாது!
-சாக்ரடீஸ்
4. பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அதன் விளைவோ பெரிது; இனிமையும் நன்மையும் பயக்கும்.
-ரூஸோ
5. உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதைவிடச் சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை. உண்மைதான் நிலைத்து நிற்கும்.
-இங்கர்சால்
6. உழைப்பே மூலதனம்; உழைப்பின்றி மூலதனம் இயங்க முடியாது!
-கார்ல் மார்க்ஸ்
7. பிறர்நலம் போற்ற வேண்டும்; தன்னைப் போல பிறரையும் எண்ண வேண்டும்.
-லெனின்
8. பல நூல்களை ஒருவன் படிக்க வேண்டும்; நூல்களுடன் ஒருவன் வளராவிட்டால் அது அவனுக்குப் பேரிழப்பாகும்!
-ஆபிரகாம் லிங்கன்
9. உண்மை பேசுவது கசப்பாக இருப்பினும் அந்த உண்மையே எல்லாவற்றிலும் சிறந்தது!
-நபிகள் நாயகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...