47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஊக்கம்!

கவியரசு கண்ணதாசன் தனது 14 பிள்ளைகளையும் ஒரே பள்ளியில்தான் படிக்க வைத்தார். அவர்கள் பரீட்சையில் பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் பரிசாகத் தருவது அவரது வழக்கம். ஒருமுறை ஒரு மகன் பரீட்சையில் தோல்வியுற்றா

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:02 am

மல்லிகா அன்பழகன்

கவியரசு கண்ணதாசன் தனது 14 பிள்ளைகளையும் ஒரே பள்ளியில்தான் படிக்க வைத்தார்.

அவர்கள் பரீட்சையில் பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் பரிசாகத் தருவது அவரது வழக்கம்.

ஒருமுறை ஒரு மகன் பரீட்சையில் தோல்வியுற்றான். அந்தச் சமயத்தில் பாஸ் செய்த மற்றவர்களுக்கெல்லாம் நூறு ரூபாய் கொடுத்த கவிஞர், தோல்வியடைந்தவனுக்கு 200 ரூபாய் பரிசாகக் கொடுத்தார்.

""இது என்ன நியாயம்?'' என்று மற்ற பிள்ளைகள் அவரைக் கேட்டனர்.

அதற்கு கண்ணதாசன், ""சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும்! ஆனால் துக்கத்திலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். அவர்களை மேலும் காயப்படுத்தாமலிருப்பதே உத்தமம்!'' என்றார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், 200 ரூபாய் பெற்ற அந்த மகன் இன்று டாக்டராக இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.