அறிவு மட்டும் இருந்து விட்டால்
ஆயிரம் கைகள்
முளைக்குமடா - உன்
அறிவில் ஆற்றல் கிடைத்து விட்டால்
அனைத்தும் நன்றாய்
நடக்குமடா!
அறிவாய் எதையும் செய்து வந்தால்
அமைதி உலகில்
தோன்றுமடா - பிறர்
அறிவை மதிக்கத் தவறி விட்டால்
அழிவே நம்மை
சூழுமடா!
அறிவு பெற்று வாழ்வ தொன்றே
அன்பு வாழ்க்கை
ஆகுமடா - நல்
அறிவை மறந்து விட்டால் இங்கே
அனைத்து துன்பமும்
சேருமடா!
அறிவே உலகை ஆளும் திறனை
அமைதி யாகப்
பெற்றதடா - உலக
அறிவைப் புரிந்து கொண்டால் போதும்
அனைத்து உயிரும்
வாழுமடா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!
வீடியோக்கள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை


