92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நற்செயல்கள் பொன்மொழிகள்

எந்தச் செயலைச் செய்தால் பின்னர் மனம் வருந்துமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ அது நற்செயல் ஆகாது

News image
Updated On :23 ஆகஸ்ட் 2013, 2:56 am

த.சீ.பாலு

 1. வாயால் போதிப்பதை விட உன் நடத்தையே சிறந்த
 போதனையாக அமையும். - கோல்ட்ஸ்மித்
 2. நற்செயல் என்ற விளைநிலத்தைச் சீர்படுத்து. அதில் இறைவன் திருநாமம் என்ற விதையைத் தூவு. - குருநானக்
 3. எந்தச் செயலைச் செய்தால் பின்னர் மனம் வருந்துமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ அது நற்செயல் ஆகாது. - புத்தர்
 4. நற்செயல்கள் அனைத்தும் இறுதியில் பலன் அளித்தே தீரும்
 என்பது என் உறுதியான நம்பிக்கை. - காந்தியடிகள்
 5. மிகச் சிறியவை என்று மக்கள் கருதும் செயல்களே மகான்களைத் தோற்றுவிக்க அடிப்படையாக உள்ளன. - தாமஸ் மன்றோ
 6. நல்ல செயல்களில் மனதைச் செலுத்தி, அதன் மூலம் தீய
 நெறிகளின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம்.
 - பித்தகோரஸ்
 7. நல்லவராய் நாம் இருப்பதற்கு நல்லது செய்ய வேண்டும்.
 - எட்வரட்டஸ்
 8. ஒவ்வொரு நற்செயலும் அழிவற்ற நித்திய வாழ்வுக்கு வித்தாகும்.
 - புனித பெர்னார்ட்
 9. நல்ல செயல்களை உரிய நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும்.
 - வள்ளலார்
 -தொகுப்பு:
 த.சீ.பாலு, சென்னை.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.