திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பொன்மொழிகள் - புத்தகம்

அலைந்தேன், திரிந்தேன், எங்கெங்கோ தேடினேன். அமைதி கிடைக்கவில்லை. கடைசியில் கிடைத்தது என் வீட்டில் ஒரு புத்தகத்தில்..!

News image
Updated On :26 ஜூலை 2013, 3:47 am

1. அலைந்தேன், திரிந்தேன், எங்கெங்கோ தேடினேன். அமைதி கிடைக்கவில்லை. கடைசியில் கிடைத்தது என் வீட்டில் ஒரு புத்தகத்தில்..!
 - தாமஸ்
 2. இந்த மாபெரும் உலகத்தின் மகத்தான அதிசயங்கள் இரண்டுதான். ஒன்று புத்தகம், மற்றொன்று உயிருள்ள மனிதன். - கிங்ஸ்லா
 3. உலகத்தின் செல்வங்கள் அனைத்தையும் தந்தாலும் புத்தகங்களைப் படிப்பதில் எனக்குள்ள ஆர்வத்தை மட்டும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். விட்டுக் கொடுப்பது முறையல்ல! - கிப்சன்
 4. நம்மைத் தட்டியெழுப்பி, அறிவு புகட்டி, மகிழ்ச்சியைக் கொடுத்து, வசதிகளை அளித்து, அச்சத்தையும் ஊட்டி, தங்கள் இதயத்தைத் திறந்து காட்டி, நம்முடைய இதயங்களோடு இன்ப உரை நிகழ்த்துவன புத்தகங்களே! - கிங்ஸ்லி
 5. ஒரு ஆடம்பரத்தை மட்டும் என்னால் விட முடியாது; அதுதான் புத்தகங்கள் வாங்கும் பழக்கம்.
 - நேரு
 6. ஒரு நல்ல புத்தகத்தைப் போல சிறந்த நண்பனும் உறவினனும் இவ்வுலகிலேயே எனக்கில்லை.
 - கவிட்யூபர்
 7. பல திறமை வாய்ந்த நண்பர்களின் தொடர்பைவிட பொறுக்கியெடுத்த சில புத்தகங்களின் உறவே அதிக நன்மை அளிக்கும். - கால்டன்
 8. ஓர் உயரிய புத்தகமானது எத்தனையோ பேர்களின் வாழ்க்கையில் புரட்சியை உண்டு பண்ணுகிறது. உலகில் சாகாவரம் பெற்றவைகள் புத்தகங்களே! - சோயத்
 
 தொகுப்பு: ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.