பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

விழித்தெழு!

மழைக்கு ஏங்கிக் கிடக்காதே - நீமரத்தை நட்டால்

Published On :5 ஜனவரி 2024, 10:12 am IST

 மழைக்கு ஏங்கிக் கிடக்காதே - நீ
 மரத்தை நட்டால்
 அது போதும்!
 
 மலையைக் கண்டு திகைக்காதே - சிறு
 உளியை எடுத்திடு
 அது போதும்!
 
 மடமை கண்டு மலைக்காதே - உன்
 கடமை செய்திடு
 அது போதும்!
 
 முள்ளைப் பகையாய் நினைக்காதே - அது
 வேலி ஆனால்
 அது போதும்!
 
 கல்லைக் கண்டு கலங்காதே - அதை
 சிலையாய் வடித்திடு
 அது போதும்!
 
 சொல்லைப் பேசிக் கிடக்காதே - நீ
 செயலாய் மாற்றிடு
 அது போதும்!
 
 நெருப்பைக் கண்டு நெகிழாதே -அதில்
 சோறு சமைத்திடு
 அது போதும்!
 
 காரிருள் கண்டு மிரளாதே - செங்
 கதிராய் எழுந்திடு
 அது போதும்!
 
 எதனைக் கண்டும் ஏங்காதே - விழித்
 தெழுந்து செயல்படு
 அது போதும்!
 

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.