ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பொன்மொழிகள்

கடவுள் கருணைக்கடல். ஆனால் அதிலே நீரெடுக்க நாம் உபயோகிக்கும் வாளிதான் சிறியது.

Updated On :17 ஜூலை 2015, 9:00 pm IST

கடவுள் கருணைக்கடல். ஆனால் அதிலே நீரெடுக்க நாம் உபயோகிக்கும் வாளிதான் சிறியது. - கிளென் போர்டு


கடவுள் வாரந்தோறும் சம்பளம் தருவதில்லை. வாழ்க்கை முடிவில் கொடுக்கிறார். - ஹாலந்து

மரணம் எந்தவிதமாகவும் வரலாம். ஆனால் காரணம் மட்டும் கெüரவம் உடையதாக இருத்தல் வேண்டும் - அலெக்ஸாண்டர் புஷ்கின்

புரிந்து கொள்ளாதபோதும் பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதி விடுகிறான். - சாக்ரடீஸ்

பெண்ணை அழும்படி செய்யாதே. ஆண்டவன் அவள் கண்ணீரை அளந்து பார்ப்பான். - இஸ்ரேல்

என்னுடைய பாட்டனார் யார் என்பதை நான் அறியேன். ஆனால் நான் கவலைப்படுவதெல்லாம் அவருடைய பேரன் எத்தகையவனாக இருக்கவேண்டும் என்பது பற்றியே. - ஆபிரஹாம் லிங்கன்

தாய் உன்னைப் பத்துமாதங்கள் சுமந்தவள். மூன்று பால் கொடுத்து வளர்த்தவள். உனக்கு எல்லாம் அவள்தான். அவள் உன்னைப்பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி நடந்து விடாதே. - முகம்மது நபி

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாகச் செய். நாளை அதனிலும் நன்றாகச் செய்யும் ஆற்றல் நீ பெறக்கூடும். -நியூட்டன்

நாம் எந்தச் செயல்களைச் செய்வதென்று முடிவு செய்வோம். நாம் செய்யும் செயல்கள் நம்மை இத்தகையவர் என்று முடிவு செய்யும். -வெர்ன்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.