டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காரணம்!

குரு நானக் தம் சீடர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இது அவரது மகன்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களைவிட சீடர்களே தந்தையிடம் அதிக அன்பைப் பெறுகின்றனர் என்று எண்ணினர். ஒரு நாள் அதற்கான காரணத்தை தந்தையிடமே கேட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:41 am

தங்க. சங்கரபாண்டியன்

குரு நானக் தம் சீடர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இது அவரது மகன்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களைவிட சீடர்களே தந்தையிடம் அதிக அன்பைப் பெறுகின்றனர் என்று எண்ணினர். ஒரு நாள் அதற்கான காரணத்தை தந்தையிடமே கேட்டனர்.

எப்படி அதைப் புரிய வைப்பது என்று குரு நானக் யோசித்தார். பக்கத்தில் இருந்த ஒரு கிண்ணத்தை எடுத்து அருகே இருந்த சாக்கடையில் வீசி எறிந்தார். அந்தக் கிண்ணத்தை எடுத்து வருமாறு தன் மகன்களைக் கேட்டுக்கொண்டார்.

உடனே அவர்கள் ஒரு வேலையாளை அழைத்து சாக்கடைக்குள் வீசப்பட்ட கிண்ணத்தை எடுத்து வருமாறு உத்தரவிட்டனர். அதே நேரம் குரு நானக் வேலைக்காரரைத் தடுத்துவிட்டு, தம் சீடர்களுள் ஒருவரை அழைத்தார்.

சீடரை நோக்கி சாக்கடைக்குள் வீசியெறிந்த கிண்ணத்தை எடுத்து வருமாறு பணித்தார்.

சிறிதும் தாமதிக்காத அந்தச் சீடர் சாக்கடைக்குள் இறங்கி கிண்ணத்தை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து குருநானக்கிடம் கொடுத்தார்.

மகன்களைப் பார்த்த குருநானக், ""நான் ஏன் சீடர்களிடம் அதிக அன்பு கொண்டிருக்கிறேன் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே!''என்றார். தங்களது அறியாமையை எண்ணி குருநானக்கின் மகன்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.