குரு நானக் தம் சீடர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இது அவரது மகன்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களைவிட சீடர்களே தந்தையிடம் அதிக அன்பைப் பெறுகின்றனர் என்று எண்ணினர். ஒரு நாள் அதற்கான காரணத்தை தந்தையிடமே கேட்டனர்.
எப்படி அதைப் புரிய வைப்பது என்று குரு நானக் யோசித்தார். பக்கத்தில் இருந்த ஒரு கிண்ணத்தை எடுத்து அருகே இருந்த சாக்கடையில் வீசி எறிந்தார். அந்தக் கிண்ணத்தை எடுத்து வருமாறு தன் மகன்களைக் கேட்டுக்கொண்டார்.
உடனே அவர்கள் ஒரு வேலையாளை அழைத்து சாக்கடைக்குள் வீசப்பட்ட கிண்ணத்தை எடுத்து வருமாறு உத்தரவிட்டனர். அதே நேரம் குரு நானக் வேலைக்காரரைத் தடுத்துவிட்டு, தம் சீடர்களுள் ஒருவரை அழைத்தார்.
சீடரை நோக்கி சாக்கடைக்குள் வீசியெறிந்த கிண்ணத்தை எடுத்து வருமாறு பணித்தார்.
சிறிதும் தாமதிக்காத அந்தச் சீடர் சாக்கடைக்குள் இறங்கி கிண்ணத்தை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து குருநானக்கிடம் கொடுத்தார்.
மகன்களைப் பார்த்த குருநானக், ""நான் ஏன் சீடர்களிடம் அதிக அன்பு கொண்டிருக்கிறேன் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே!''என்றார். தங்களது அறியாமையை எண்ணி குருநானக்கின் மகன்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


