முத்துக் கதை: விளையும் பயிர்
அது ஒரு விளையாட்டு மைதானம். அங்கு கூடைப்பந்து, வாலிபால், முதலிய விளையாட்டுகளை வாலிபர்களும், சிறுவர்களும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.


அது ஒரு விளையாட்டு மைதானம். அங்கு கூடைப்பந்து, வாலிபால், முதலிய விளையாட்டுகளை வாலிபர்களும், சிறுவர்களும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். மைதானத்தின் ஓரப் பகுதியில் ஐந்தாறு இளம் சிறார்கள் சின்னப் பந்தை மட்டையால் அடித்து உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் அதிவேகமாக பந்தை ஒரு சிறுவன் அடிக்க பந்து உருண்டோடி ஒரு சின்னக் குழிக்குள் விழுந்து விட்டது. சிறுவர்கள் குழிக்குள் கையை விட்டு பந்தை எடுக்க முயற்சி செய்தார்கள். பந்து கைக்கு எட்டவில்லை. குழி அதிக ஆழமாக இருந்தது. சிறுவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். பந்தை எடுக்க இயலாததால் பந்திற்குரியவனுக்கு அழுகையே வந்துவிட்டது. அப்பொழுது உடன் இருந்த சிறார்களில் ஒருவன், ""இதற்குப் போய் ஏன் அழுகிறாய்...? பந்தை எடுத்துவிடலாம்...,பயப்படாதே...'' என்கிற நம்பிக்கையை ஊட்டினான். ""எப்படி?''என்று பந்தைப் பறி கொடுத்தவன் வினவினான்.
""அந்தக் கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர முடியுமா?'' என்று கேட்க...,நீர் நிரம்பிய வாளியைக் கொண்டு வந்தார்கள் நண்பர்கள். வாளியில் இருந்த தண்ணீரை அந்தச் சிறுவன் குழிக்குள் ஊற்ற...,பந்து மிதந்து மேலே வந்து விட்டது. பந்துக்குரியவன் முகத்தில் மகிழ்ச்சி. பந்தை பத்திரமாக எடுக்க வழிவகை செய்த சக தோழனின் புத்திக் கூர்மையைக் கண்டு எல்லோரும் வியந்தார்கள்! அந்தப் புத்திசாலிப் பையன்தான்........, ஜவஹர்லால் நேரு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...