மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

கதைப்பாடல்: அழகா? ஆற்றலா?

தோகை அழகை வியந்து சொல்லி தானே பெருமை பட்டது - என்

News image
Updated On :21 நவம்பர் 2015, 11:14 am

ந. தமிழ்செல்வன்

தோகை அழகை வியந்து சொல்லி

 தானே பெருமை பட்டது - என்

தோகை போல வேறெங்குமில்லை

 என்று செருக்கு கொண்டது!

பறந்து போன கொக்கை அதட்டி

 பக்கம் வரவே சொன்னது - உன்னில்

சிறந்த இறகு எனக்குத் தானே

 என்று சொல்லி  மகிழ்ந்தது!

வண்ண வண்ண வானவில் போல

 வடிவில் கூட  இருந்தது - என்

எண்ணம் போல எல்லா வண்ணம்

 எந்தத் தோகை  கொண்டது!

என்னை விடவும் அழகு இல்லை

 என்றே புகழ்ச்சி கொண்டது - அது

தன்னை அதிகப் படியாய் எண்ணிக்

 கொண்டு ஆட்டம்  போட்டது!

கொக்கே உனக்கு வண்ணம் ஒன்றே!

 அழுக்காய் கூட  கிடக்கிறாய்! - என்று

கொக்கை கோபப் படுத்தி மயிலும்

 மகிழ்ந்து இருப்பதைப் பார்க்கிறாய்!

அழகிய மயிலே அனைத்தும் உண்மை

 ஆனால் என்போல் பறந்திடு - உன்

அழகை கொண்டு தூர மாகப்

 பறக்க முடியா  உணர்ந்திடு!

பதுங்கிய நரியைக் கண்டு இரண்டும்

 பட்டென இறக்கை  அடித்தது - நரி

பதுங்கித் தாவி மயிலைக் கவ்வி

 தோகை பிரித்து உண்டது!

கொக்கின் வேகம் தக்க படியாய்

  இருந்த தாலே  விரைந்தது! - அழகில்

சொக்கி இருந்த மயிலோ நரியின்

 உணவாய் மாறி மறைந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.