தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பொன்மொழிகள்

அன்பு நிறைந்த இன்சொல் இரும்புக் கதவுகளையும் திறக்கும்.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 11:04 am

அன்பு நிறைந்த இன்சொல் இரும்புக் கதவுகளையும் திறக்கும்.

- ரொசட்டி

ஆலோசனை நல்லதாய் இருந்தால் அதைக் கூறியது யார் என்று கவலை வேண்டாம்.

- ஆவ்பரி

இறந்த காலத்தைப் பற்றி அழாதே! நிகழ்காலத்தில் ஒழுக்கத்துடன் இரு. எதிர்காலத்தைப் பற்றி பயப்படாதே.

- கோல்டன்

உயர்ந்த நோக்கங்கள் உயர்ந்த உள்ளங்களை அமைக்கின்றன.

- சிம்மன்ஸ்

உலகம் ஒரு கண்ணாடி. நாம் நகைத்தால் அது நகைக்கும்...,நாம் முகம் சுளித்தால் அதுவும் முகம் சுளிக்கும்.

- கோல்டன்.

எண்ணம் ஒரு மலர்! மொழி அதன் மொட்டு! செயல் அதன் கனி!

- பீச்சர்

எதற்கும் தயாராக இருப்பவனைத்தான் வாய்ப்புகள் தேடி வரும்.

- போவீ

எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ அந்த வீட்டில்தான் உயிர் ஒளி இருக்கிறது. உலகில் இறவாத பொருள் புத்தகங்களே.

- சோயத்தே

ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இரு. நீ சுறுசுறுப்பாய் இருப்பதை நீயே உணர்வாய்!

- தாமஸ் புல்லர்

சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.

- ஹெர்பர்ட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.