டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முத்துக் கதை: வழி காட்டுதல்

ஓர் ஊருக்குச் செல்கிறபோது ஒரு முதியவரும் ஓர் இளைஞனும் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவனிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி, ""அங்கு செல்ல வேண்டும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

தங்க. சங்கரபாண்டியன்

ஓர் ஊருக்குச் செல்கிறபோது ஒரு முதியவரும் ஓர் இளைஞனும் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவனிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி, ""அங்கு செல்ல வேண்டும்

எவ்வளவு நேரம் ஆகும்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த ஊரைச் சேர்ந்தவன், ""மெதுவாகப் போனால் விரைவில் அடைந்து விடலாம். விரைவாகப் போனால் நீண்ட நேரம் ஆகும்'' என்று பதில் சொன்னான். இப்பதில் முதியவருக்கு வியப்பைத் தந்தது.

 அந்த ஊரை அடைய முதியவர் வேகமாக நடக்க முற்பட்டார். அந்தப் பாதை மேட்டுப்பாங்கான, கரடு முரடான சரளைக் கற்கள் நிறைந்த பாதையாகவும் இருந்தது. எனவே அதில் அவர் அடிக்கடி சறுக்கி விழ நேர்ந்தது. அடிக்கடி விழுந்த காரணத்தினால் உடலில் சிராய்ப்புடன் ரத்தக் காயங்கள் ஏற்பட்டது. மேலும் முதியவருக்கு மிகவும் களைப்பு ஏற்பட்டது. தான் செல்ல விரும்பிய இடத்தை அடைவதற்கு அவர் வெகு நேரம் எடுத்துக் கொள்ளும்படி ஆனது.

 ஆனால் இளைஞன் மட்டும் மெதுவாக தனது இலக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பாதையை கவனமுடன் கவனித்துக் கடந்ததால் எங்கும் அவன் சறுக்கவில்லை. விழவுமில்லை. நிதானமாகச் சென்றதனால் உரிய நேரத்தில் இளைஞன் இலக்கை அடைந்தான்.

 எத்தகைய பாறையாக இருந்தாலும் வேகமாகக் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை முதியவருக்கு!

 எத்தகைய பாறையாக இருந்தாலும் நிதானமாகக் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை இளைஞனுக்கு!

 வழிகாட்டியின் சொல்லை மதிக்காமல் சென்றதால் தோல்வியுற்றார் முதியவர்!

 வழிகாட்டியின் சொல்லை மதித்ததால் இலக்கை எளிதில் அடைந்தான் இளைஞன்!   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.