இதுவே மருந்து!

பணக்காரக் கனவானும் அவரது மனைவியும் மருத்துவ மேதை ரங்காச்சாரியிடம், இளைத்த தங்கள் குழந்தையைக் கொண்டுவந்து மருத்துவம் பார்க்கும்படி கூறினார்.
இதுவே மருந்து!

பணக்காரக் கனவானும் அவரது மனைவியும் மருத்துவ மேதை ரங்காச்சாரியிடம், இளைத்த தங்கள் குழந்தையைக் கொண்டுவந்து மருத்துவம் பார்க்கும்படி கூறினார். அவர் குழந்தையை உச்சிமுதல் உள்ளங்கால்வரை தெளிவாக சோதனை செய்து பார்த்தார். பெற்றோர்களிடமிருந்து ஒரு குழந்தைக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய அன்பு, பாசம், அரவணைப்பு, ஒன்றும் கிடைக்காததுதான் குழந்தையின் இந்த நிலைக்கும் காரணம் என்பதை அறிந்து கொண்டார்.

மருந்துச் சீட்டில், ""மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தையுடன் கொஞ்சி விளையாட வேண்டும்'' என்று எழுதிக் கொடுத்தார். அவருடைய கட்டளைப்படி பெற்றோர்கள் செய்தனர். சிறிது காலத்திலேயே குழந்தை குண்டாக வளர ஆரம்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com