தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ரூ. 17,258 கோடி லாபம் ஈட்டிய ஹெச்பிசிஎல்!!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், மார்ச் வரையான காலாண்டில், சாதனை நிகர லாபம் பதிவு செய்ததாக இன்று அறிவித்தது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

புதுதில்லி: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நடைபெற்று வரும் போரினால் ஏற்பட்ட பாதிப்பதற்கு முன்னதாக, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், மார்ச் வரையான காலாண்டில், சாதனை நிகர லாபம் பதிவு செய்ததாக இன்று அறிவித்தது.

2025-26 நிதியாண்டின் 4வது காலாண்டான நிகர லாபம், கடந்த ஆண்டு இருந்த ரூ. 3,354.98 கோடியிலிருந்து 46 சதவீதம் உயர்ந்து ரூ. 4,901.50 கோடியாக அதிகரித்தது.

மேற்கு ஆசிய மோதல் தொடங்கிய பிறகு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களிலிருந்து உள்நாட்டு சந்தையைப் பாதுகாப்பதற்காக, ஹெச்பிசிஎல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என இணைந்து செயல்பட்டதால், மார்ச் மாதத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை அடக்க விலையை விடக் குறைவாக விற்பனை செய்து பெரும் நஷ்டத்தைச் சந்தித்த போதிலும், சாதனை காலாண்டு லாபம் பதிவு செய்தது.

ஒரு பேரல் கச்சா எண்ணெயை எரிபொருளாக மாற்றுவதன் மூலம் ஹெச்பிசிஎல் 5.74 அமெரிக்க டாலர் மொத்த சுத்திகரிப்பு லாப வரம்பை விட 8.79 அமெரிக்க டாலர் லாபம் ஈட்டியது.

2026 நிதியாண்டில் ரூ. 17,175.23 கோடி என்ற சாதனை நிகர லாபத்தைப் பதிவு செய்தது ஹெச்பிசிஎல். இதுவே கடந்த ஆண்டு ஈட்டிய ரூ. 7,271.32 கோடி லாபத்தை விட இது இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். 2023-24 நிதியாண்டில் ஈட்டிய ரூ. 14,694 கோடி வருவாயை விட இது அதிகமாகும்.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போதிலும் சில்லறை எரிபொருள் விலை முடக்கப்பட்டதால், ஹெச்பிசிஎல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை சாதனை லாபத்தைப் பதிவு செய்தன.

ஏப்ரல் 2022 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. மேற்கு ஆசிய மோதல் காரணமாக சர்வதேச எண்ணெய் விலை 50 சதவீதம் உயர்ந்த பிறகும் இந்த நிலை தொடர்ந்தது.

2024 நிதியாண்டில் சர்வதேச சந்தையில், விலை குறைவாக இருந்தபோது எண்ணெய் நிறுவனங்கள் கணிசமான லாப வரம்புகளை ஈட்டின. தற்போது சர்வதேச எண்ணெய் விலை உயர்வால் நிலைமை தலைகீழாக மாறி, நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

இந்த நிதியாண்டில், கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்து, நிதியாண்டு 2026ல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 26.04 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டது.

நிதியாண்டு 2026ல் விற்பனை அளவு 3.3 சதவீதம் அதிகரித்து, சந்தைப்படுத்தலிலும் சீரான வளர்ச்சி காணப்பட்டது.

இயக்குநர் குழு, பங்கு ஒன்றுக்கு ரூ. 19.25 இறுதி ஈவுத்தொகை வழங்கி பரிந்துரைத்துள்ளது.

Summary

industan Petroleum Corporation Ltd on Wednesday reported a record net profit during the March quarter and the fiscal year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.