பொன்மொழிகள்!
பசியோடு இருக்கும் ஒருவன், தன் உணவை அடுத்தவனுக்குக் கொடுத்தால், அதுவே அவனை மேலும் சக்தியுள்ளவன் ஆக்குகிறது.


பசியோடு இருக்கும் ஒருவன், தன் உணவை அடுத்தவனுக்குக் கொடுத்தால், அதுவே அவனை மேலும் சக்தியுள்ளவன் ஆக்குகிறது.
- புத்தர்
இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒருபோதும் நாளை வரை தள்ளிப் போடாதீர்கள்.
- பெஞ்சமின் ஃபிராங்ளின்
ஈடுபாடு, பங்கேற்பு, பொறுப்புணர்வு இந்த மூன்று அம்சங்களே செயல் திட்டத்தின் தாரக மந்திரங்கள்.
- அப்துல் கலாம்
மனத்தை ஒருவன் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவன் அடையும் மகிழ்ச்சி இருக்கிறது.
- ஆபிரஹாம் லிங்கன்
வாழ்க்கையை எண்ணத்தாலும், செயலாலும் அளக்க வேண்டும்....காலத்தால் அல்ல!
- சர் ஜான் லபாக்
இலட்சியம் பெரிதாக இருக்கும் என்றால் நமது வெற்றியும் பெரிதாக இருக்கும்!
- பிரைட்
எதிர்மறையான நிகழ்வுகளை நேர்மறையாக எடுத்துக் கொள்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்!
- கலீல் ஜிப்ரான்
ஏமாற்றங்களைத் தீயிலிட்டுப் பொசுக்குங்கள்,....மனதிற்குள் வைத்துப் பூட்டாதீர்கள்.
- விவேகானந்தர்
உடல் ஆரோக்கியத்திற்கும் மன மகிழ்ச்சிக்கும் உதவக்கூடிய ஒன்றே ஒன்று ..."உழைப்பு!!'
- ராக்பெல்லர்
ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடிப்பதுதான் அந்தச் செயலுக்குக் கிடைக்கக் கூடிய விருது!
- எமர்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...