மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நினைவுச் சுடர்!: மாமனிதர்!

இரவு பத்து மணி. தன் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு சேலம் பேருந்து நிலையம் விரைந்தார் அவர். சென்னைக்குச் செல்ல வேண்டும்.

News image
Updated On :13 ஜூலை 2018, 6:30 pm

செல்வகதிரவன்

இரவு பத்து மணி. தன் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு சேலம் பேருந்து நிலையம் விரைந்தார் அவர். சென்னைக்குச் செல்ல வேண்டும்.  பேருந்தில் தன் பிள்ளையுடன் அமர்ந்தார் அவர். வண்டி புறப்பட்டது. பிள்ளைக்குப் பத்து வயது. நடத்துனர் வந்தார். பத்து வயது ஆகாத பிள்ளைகளுக்கு அரை டிக்கட் வாங்கினால் போதும் என்பது அப்போதைய விதி. நடத்துனர் ஒரு முழு டிக்கட்டையும், ஒரு அரை டிக்கட்டையும் வழங்கினார்.  பேருந்து புறப்பட்டது!

இரவு மணி பன்னிரெண்டு ஆகிவிட்டது!  நடத்துனரைக் கூப்பிட்டார் பிள்ளையோடு வந்தவர்.  ""என் பையனுக்கு பத்து வயது பூர்த்தியாகி இப்பொழுது முதல் பதினொன்று வயது தொடங்கி விட்டது. அவன் முழு டிக்கெட்டுக்கான தகுதியைப் பெற்றுவிட்டான். அதனால் இன்னொரு அரை டிக்கெட்டைக் கொடுங்கள்!'' என்றார். நடத்துனர் அந்த மனிதரின் நேர்மையை வியந்தார். பயணச்சீட்டையும் வழங்கினார்.

அதே பிரமுகர் சில வருடங்களுக்குப் பின் சென்னை மாகாண முதல்வரானார். வெளியூர் பயணம் முடிந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு முன்பு வாகனத்தை நிறுத்தி ஓட்டுனர் டிக்கியைத் திறந்து பலாப்பழம் ஒன்றை எடுத்து வந்தார். இதைப் பார்த்த முதல்வர், ""இது ஏது?'' என்று கேட்டார். 

""ஐயா, நீங்க தங்கியிருந்த விருந்தினர் விடுதி தோட்டத்தில் இருந்த மரத்தில் காய்த்தது! 

விடுதிக் காவவர் பறித்து அய்யாவுக்குக் கொடுங்கன்னு தந்தார்!'' 

""அப்படியானால் இது சர்க்கார் சொத்து!....இதோட விலையை விசாரிச்சு பணத்தைக் கருவூலத்தில் கட்டிவிடு!'' என்று அப்போதே பணத்தை எடுத்து ஓட்டுனரிடம் வழங்கினார் முதல்வர். 

நேர்மை தவறாத அந்த மாமனிதர்தான் "ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்!' 1947 இல் இருந்து 1949 வரை தமிழக முதல்வராக இருந்தவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.