பாரதி என்றொரு சாரதி!
பாரதி என்றொரு சாரதி வந்தொருசரித்திரம் ஆகி நின்றார் - புதுச்சாத்திரம் கூறிச் சென்றார்


பாரதி என்றொரு சாரதி வந்தொரு
சரித்திரம் ஆகி நின்றார் - புதுச்
சாத்திரம் கூறிச் சென்றார்
ஊரெலாம் ஒன்றெனும் ஒருமைப் பாட்டை
உயிரெனப் பேண்ச்சொன்னார்! - நம்மை
உயர்வழி காணச் சொன்னார்!
காலை எழுந்ததும் படித்திடு என்று
கன்னத்தில் முத்தமிட்டார்! - நமக்குக்
கவியெனும் மெத்தையிட்டார்!
மாலை முழுதும் விளையாடு எனவே
மனங்களை உறுதி செய்தார்! - நம்
வழிகளைப் புதுமை செய்தார்!
பொய்யையும் புரட்டையும் புரட்டிப் போட்டுப்
பொதுமையை நாடச் சொன்னார் - போலிப்
பெருமையைச் சாடச் சொன்னார்!
கைகளை உயர்த்திக் கண்களைச் சுழற்றிக்
கடமைகள் ஆற்றச் சொன்னார்! - வரும்
தடைகளை ஓட்டச் சொன்னார்!
தமிழத்திரு நாட்டினைத் தாயெனக் கும்பிட்டுத்
தரணியைப் பேசச் சொன்னார்! - வெறும்
தருக்கரை ஏசச் சொன்னார்!
அமிழ்தினும் இனிதென அன்னைத் தமிழை
அரியணை ஏற்றச் சொன்னார்! - இந்த
அகிலத்தை மாற்றச் சொன்னார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...