அவரும் மனிதர்தான்!

சென்னைநகரினில் எழுத்தாளர் - ஜெயகாந்தன், வீட்டினிலே - சிலதென்னை மரங்கள் வளர்த்து வந்தார்; - அதில்
அவரும் மனிதர்தான்!
Updated on
1 min read

சென்னைநகரினில் எழுத்தாளர் - ஜெய
காந்தன், வீட்டினிலே - சில
தென்னை மரங்கள் வளர்த்து வந்தார்; - அதில்
காய்த்தன தேங்காய்கள்;

நன்கு பருத்த காய்களைக் கவர்ந்திட
நள்ளிர வாகுகையில் - ஒரு
நபர்,மரம் ஏறிப் பறிப்பதை - ஜெய
காந்தன் தெரிந்து கொண்டார்;

மாடியில் ஏறி விளக்கினைப் போட்டார்;
திருடரோ பயந்துவிட்டார்.
""மரத்தில் இருந்து விழுந்துவிடாதே;
மனம்போல் பறித்துக்கொள்...

...தேடிப் பார்த்துத் தேங்காய் பறிக்கப் 
பகலில்ஏன் வரவில்லை? - இருள்
திரண்ட ராத்திரி வேளையில் வந்தா,
தென்னையில் ஏறுவது?....

....வேண்டும் காய்களை எடுத்துக்கொண்டு
மீதியைப் போட்டிடுக! - கீழே
வீழ்ந்துவிடாமல் பத்திரமாக
வீடுபோய்ச் சேர்ந்திடுக! ''

எனக் கூறிவிட்டு ஜெயகாந்தன் 
வீட்டுக்குள் போய்விட்டார் - பிறகு
விடிந்த காலையில் மரத்தடிதனில் - தேங்
காய்களைப் பார்த்திட்டார்;

இரவினில் வந்தவர் திருடர்தான் ஆயினும்
கூச்சலும் இடவில்லை - ஜே.கே.
"எவர்தான் ஆயினும் அவர்மானுடர்" எனும்
கொள்கையை விடவில்லை;

"வறுமையின் காரணமாகவே மானுடர்
திருடர்கள் ஆகின்றார்; - ஒரு
வாய்ப்பினை நல்கினால் அவரும் திருந்துவர்"
என்பதை நிறுவிவிட்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com