மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நினைவுச் சுடர்!: பணமல்ல; வாக்குறுதி!

ஒருமுறை காந்தியடிகள் கோவை வந்திருந்தபோது, ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஒரு புகைப்படத்தை காந்தியடிகளிடம் கொடுத்து, அதில் காந்தியடிகளின் கையெழுத்து வேண்டும் என்று கேட்டார்.

News image
Updated On :3 மே 2019, 6:30 pm


ஒருமுறை காந்தியடிகள் கோவை வந்திருந்தபோது, ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஒரு புகைப்படத்தை காந்தியடிகளிடம் கொடுத்து, அதில் காந்தியடிகளின் கையெழுத்து வேண்டும் என்று கேட்டார்.
""என் கையெழுத்திற்கு அதிக விலை தரவேண்டும்'' என்றார் காந்தியடிகள்.
""எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்'' என்றார் ஏ.கே.செட்டியார்.
காந்தியடிகள் அவரிடம், ""நான் கேட்பது பணம் அல்ல; ஒரு வாக்குறுதி. ஒவ்வொரு நாளும் அரைமணி நேரம் கைராட்டையால் நூல் நூற்பதாக எனக்கு  நீங்கள் வாக்குறுதி தரவேண்டும்'' என்றார்.
சண்முகம் செட்டியார் யோசித்துவிட்டு, ""நிச்சயம் இதை செய்ய முடியாதே!'' என்றார்.
உடனே காந்தியடிகள், ""உமது நேர்மையைப் பாராட்டுகிறேன். வாக்குறுதி தந்து மீறுவதை விட, முடியாது என்பதை ஒப்புக்கொண்ட உம்மை பாராட்டுகிறேன்'' என்றார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.