27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அறிவுக்குருவி!

அழுத குழந்தையைத் தூக்கியுமேஅம்மா அடுப்பறை சென்றளாம்கொழுகொழு பொம்மையாம் குழந்தைக்கே

News image
Updated On :12 டிசம்பர் 2020, 6:00 am IST

அழுத குழந்தையைத் தூக்கியுமே
அம்மா அடுப்பறை சென்றளாம்
கொழுகொழு பொம்மையாம் குழந்தைக்கே
குனிந்தே முத்தம் தந்தாராம்!

தட்டில் சோற்றைப் பிசைந்தேதான் 
தாயும் குழந்தைக்கு ஊட்டினளாம்
தட்டி விட்டே பாப்பாவும் 
சாப்பிட அடமே பிடித்ததுவாம்!

தட்டென ஏதோ சத்தம் வர 
தரையில் குழந்தையை இறக்கிவிட்டே 
பட்டென உள்ளே சென்றாராம் 
பார்த்ததன் பின்னே வந்தாராம்!

தட்டைச் சுற்றிலும் ஐந்தாறு 
தவிட்டுக் குருவிகள் இருந்தனவாம்!
கொட்டிய பருக்கை களை அவைகள் 
கொத்திக் கொத்தித் தின்றனவாம்!

பருக்கைகள் பாப்பா உடலெங்கும்!
மல்லிகைப் பூக்களாய் இருந்தனவாம்!
பருக்கைகள் எடுத்துக் குருவிக ளுக்கு 
பாப்பா வீசி மகிழ்ந்ததுவாம்!

குருவிகள் தின்ற பின் தாயும் 
குனிந்தே குழந்தையைத் தூக்கினளாம்!
""அறிவுக் குருவியே என் பாப்பா
அடடா!''  என்றே மகிழ்ந்தாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.