கடி

""இது நான் பிறந்ததும் எழுதிய ஜாதகம்.''""ஆச்சரியமா இருக்கே!.... நீ பிறந்த உடனே ஜாதகமெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டியா?''
கடி

""இது நான் பிறந்ததும் எழுதிய ஜாதகம்.''
""ஆச்சரியமா இருக்கே!.... நீ பிறந்த உடனே ஜாதகமெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டியா?''

- என்.பர்வதவர்த்தினி, 
பம்மல், சென்னை - 600075. 


""நான் டாக்டர் பட்டம் வெச்சிருக்கேன்!''
""அடேங்கப்பா!.... இந்த சின்ன  வயசிலேயேவா?''
""அதில்லே,..... ஒரு பட்டம் வாங்கி அதிலே டாக்டர் படம் வரைஞ்சிருக்கேன்!''

கே . இந்து குமரப்பன், 
விழுப்புரம் - 605602.

""பாட்டி,.... உனக்கு பட்டாணி பிடிக்குமா?''
""பல்லே இல்லை....பட்டாணி எப்படிடா பிடிக்கும் ?''
""அப்ப  இந்த பட்டாணிய பத்திரமா வெச்சுக்க.... விளையாடிட்டு வந்து 
வாங்கிக்கிறேன் பாட்டி !'' 

அசோக்ராஜா, 
 திருச்சி - 620015

""எங்க வீட்டுக்குள்ளே  நாலு ரூம் இருக்கு..... தோட்டத்திலே எழுபது ரூம் இருக்கு!''
""யம்மாடியோவ்!..... அப்படியா?''
""மஷ்ரூம்டா!...''

டீ.என்.பாலகிருஷ்ணன், 
சென்னை - 600091.

"".... உடம்பு "பெருக்கறது' கெடுதலாம்மா?''  
""ஆமாம்!....''
""பின்னே ஏன் என்னைப் பெருக்கச் சொல்றே?''

அசோக்ராஜா, 
திருச்சி- 620015.

""பாலில் இருந்து நமக்கு வேறு என்ன பொருளெல்லாம் கிடைக்கும்.... சொல்லுங்க!''
""காபி, டீ, பாதாம் பால், ஐஸ்க்ரீம், மில்க் ஷேக்.... சார்!''

ஆர்.மகாதேவன், 
திருநெல்வேலி டவுன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com