ஒருவன் தன் வாழ்வின் முற்பாதியில் கற்றுக் கொண்ட பழக்கங்கள்தான் அடுத்த பிற்பாதியில் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.
- தாஸ்தோவஸ்கி
மனம் ஒழுங்காக, நன்றாக இருந்தால் நல்ல எண்ணங்கள் தாமாகவே தோன்றும்.
- காஸ்பான்
செய்யும் வேலையில் விருப்பமில்லாமல் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்பவன் பணத்தையும் சம்பாதிப்பதில்லை.... வாழ்க்கையில் இன்பத்தையும் பெறுவதில்லை.
- சாமுவேல் உல்மேன்
துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.
- ஜார்ஜ் பெய்ஷி
மனிதர்களை வசப்படுத்த வழி அவர்களைக் குறை சொல்வதன்று....... மாறாக அவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வதே.
- ரான்னிங்
ஒரு முள் குத்திய அனுபவம்கூட காடளவு எச்சரிக்கைக்குச் சமம்!
- லின்டால் டேவர்
ஒழுக்கம் அனைத்தையும் பெற்றுத் தரும். வாழ்வையும் பாதுகாக்கும்.
- காந்தி
மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் உள்ளது. மற்றவர்கள் வீட்டில் அதைத் தேடவேண்டியதில்லை.
- டக்ளஸ் ஜெரால்டு
ஒரு பக்கம் சத்தியமும், ஒரு பக்கம் அன்பும் கொண்ட காசுதான் உலகில் எங்கும் எக்காலத்திலும் செல்லும் காசு!
- காந்தி
நான் என்ன செய்ய வேண்டும் என்பதுவே என் கவலை. என்னைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது அன்று!
- எமர்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (25.06.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கடகம்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



