எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை.
ஆற்றல்களுக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கமே.
பிறருடைய பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கை விடாதீர்கள்.
உதடுகளை மூடு. இதயத்தைத் திற.
அதிகப் படிப்பு மட்டும் உண்மை மனிதர்களை உண்டாக்கிவிட முடியாது.
தன்னைத்தானே நம்பாமல் சந்தேகிப்பது வீழ்ச்சிக்கு முதல் காரணம்.
நாம் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டியது கண்டிப்புடன் இருக்கும் நம் மனசாட்சிதான்.
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடுதலையும் அறிவான்.