காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிழைக்க வழி!

பிழைப்பதற்கு வழியின்றி உலகநாதன் தவித்தான்.   ஊரிலிருந்த சாந்தமூர்த்தி என்ற அறிஞரை சந்தித்தான்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 12:30 am

மயிலை மாதவன்


பிழைப்பதற்கு வழியின்றி உலகநாதன் தவித்தான்.   ஊரிலிருந்த சாந்தமூர்த்தி என்ற அறிஞரை சந்தித்தான்.  தன் நிலைமையைச் சொல்லி ஆலோசனை கேட்டான். அவரும் பொறுமையாக அனைத்தையும் கேட்டார். பிறகு உலகநாதனிடம், ""இந்த ஊர் பரந்து விரிந்து கிடக்கிறது..... கடவுள் யாரையும் கைவிடமாட்டார்..... வெளியூர் சென்று வா.... அங்கு உனக்கு நல்லதே நடக்கும்!'' 

உலக நாதனும் அதற்கு சம்மதித்துப் புறப்பட்டான். பிறகு இரண்டு நாள்களில் ஊர் திரும்பினான்.  சாந்த மூர்த்தியை சந்தித்தான். அவரிடம், ""தங்களின் அறிவுரைப்படி நான் திரும்பிவிட்டேன்..... வழியில் ஒரு வறண்ட நிலம்  இருந்தது.... கடுமையான வெயில்! நடந்து களைத்துப் போய் அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தேன்.  அந்த மரத்தில் ஒரு நொண்டிக் காகம் இருந்தது. அதனால் பறக்க முடியவில்லை. பசியால் துடித்துக்கொண்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இன்னொரு காகம் தான் கொண்டுவந்த உணவை நொண்டிக் காகத்திற்கு ஊட்டியது! எங்கோ ஒரு பாலைவனத்தில் இருக்கும் நொண்டிக் காக்கைக்குக் கூட இறைவன் உணவு அளிக்கும்போது என்னை நிச்சயம் கைவிடமாட்டான் என்று எண்ணி திரும்பி வந்து விட்டேன்!'' என்று கூறினான். 

அறிஞர் புன்னகைத்தபடி, ""உலகநாதா, அதெல்லாம் சரி!..... நீ அதில் எந்தக் காகம்?.... '' என்று கேட்டார்.

""ஐயா, நீங்க என்ன கேட்கறீங்க புரியலையே!'' என்று திடுக்கிட்டுக் கேட்டான் உலகநாதன். 
""அதில்லை உலகநாதா!.... யாராவது உணவு தந்து உதவுவார்களா என்று ஏங்கும் அந்த நொண்டிக்காகமா?.... அல்லது பாடுபட்டு உணவு தேடி தானும் உண்டு இயலாத பிறருக்கும் வழங்கிய வலிமையுள்ள காகமா?... . நீ அதில் எந்தக் காகம்? என்று கேட்டேன்!'' என்றார் சாந்தமூர்த்தி. 

உலகநாதனுக்குத் தன் தவறு புரிந்தது. வெட்கினான். பிறகு உண்மையை உணர்ந்தவனாய் சாந்தமூர்த்தியை வணங்கிவிட்டு தெளிவடைந்த முகத்துடன் சுறுசுறுப்பாய் விடைபெற்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.