கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் வாழ்க்கைக்கு அவசியமான மூன்று முக்கிய தாரக மந்திரங்களில் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. கசந்தாலும் உடலுக்கு நன்மை தரும் காய்...
2. இரக்கம் என்ற சொல்லைக் குறிக்கும் மற்றொரு சொல்...
3. வெப்பத்தைத் தணிக்கும், சுவை நீரைத் தரும் பழம்...
4.முன்பெல்லாம் மனநிலை சரியில்லாதவர்களை இப்படித்தான் சொன்னார்கள்...
5. துன்பம் வந்தால் கூடவே மனதில் இதுவும் வரும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. பாகற்காய்,
2. காருண்யம்,
3. தர்பூசணி,
4. பைத்தியம்,
5. வருத்தம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : கண்ணியம்