வெண்ணை தன்னைத்
திருடும் சின்னக்
கண்ணன் வருகிறான்!
மண்ணை உண்டு
மாயம் செய்த
கண்ணன் வருகிறான்!
குடை பிடித்து
மழை தடுத்த
கண்ணன் வருகிறான்!
உடை கொடுத்து
மானம் காத்த
கண்ணன் வருகிறான்!
பூங்குழலை
ஊதுகின்ற
கண்ணன் வருகிறான்!
படிக்க நல்ல
கீதை தந்த
கண்ணன் வருகிறான்!
கண்கள் ரெண்டை
மூடித் தொழ
கண்ணன் வருகிறான்!
காணும் பொருள்
யாவுமான
கண்ணன் வருகிறான்!