

அன்னை மரியாள் அன்று செய்த
அருமைத் தவத்தினாலே - உலகில்
அவதரித்தார் ஏசு - நல்ல
அன்பை எங்கும் விதைப்ப தற்கே
அங்கு மிங்கும் சென்றார் - இன்பம்
எங்கும் நிலைக்கச் செய்தார்!
தொண்டு செய்வ தற்கே உலகில்
தோன்றி வந்தார் ஏசு - அன்பை
ஊன்றி வந்தார் ஏசு - தோன்றும்
எண்ணில் லாத துன்ப மெல்லாம்
ஏற்றுக் கொண்டார் ஏசு - எனவே
போற்றப் பெற்றார் ஏசு!
கூவிக் கூவி அழைத்து மக்கள்
குறைகள் கேட்டார் ஏசு - அவர்
குறைக ளைந்தார் ஏசு - நாட்டில்
பாவி கள்தம் பாவம் போக்கப்
பரனைத் தொழுதார் ஏசு - பரனைச்
சரண டைந்தார் ஏசு!
சின்னச் சின்னக் கதைகள் மூலம்
சிந்தை தூய்மை செய்தார் - மக்கள்
சிந்தை எல்லாம் நிறைந்தார் - யாரும்
என்றும் கர்த்தர் வழியில் செல்ல
ஏற்ற வழியைச் சொன்னார் - அவரைப்
போற்றும் வழியைச் சொன்னார்!
என்ன பாவம் செய்த போதும்
ஏசு பொறுமை காத்தார் - அவர்
மாசு மருவைத் தீர்த்தார் - ஆழ்ந்த
அன்பால் பாவம் செய்த பேரை
ஆண்ட வாமன் னிப்பாய் - என்று
வேண்டிக் கொண்டார் ஏசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்காளா் அடையாள அட்டைகளை ஒப்படைத்த பொதுமக்கள்: தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை கண்காணிக்கப்படும்

மன்னாா்குடி வாக்குச்சாவடிகளில் தோ்தல் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

