ஏசுநாதர்

அன்னை மரியாள் அன்று செய்தஅருமைத் தவத்தினாலே - உலகில்அவதரித்தார் ஏசு - நல்ல
ஏசுநாதர்

அன்னை மரியாள் அன்று செய்த
    அருமைத் தவத்தினாலே - உலகில்
அவதரித்தார் ஏசு - நல்ல
    அன்பை எங்கும் விதைப்ப தற்கே
அங்கு மிங்கும் சென்றார் - இன்பம் 
    எங்கும் நிலைக்கச் செய்தார்!

தொண்டு செய்வ தற்கே உலகில்
    தோன்றி வந்தார் ஏசு - அன்பை 
ஊன்றி வந்தார் ஏசு - தோன்றும் 
    எண்ணில் லாத துன்ப மெல்லாம் 
ஏற்றுக் கொண்டார் ஏசு - எனவே
    போற்றப் பெற்றார் ஏசு!

கூவிக் கூவி அழைத்து மக்கள்
    குறைகள் கேட்டார் ஏசு - அவர்
குறைக ளைந்தார் ஏசு - நாட்டில் 
    பாவி கள்தம் பாவம் போக்கப் 
பரனைத் தொழுதார் ஏசு - பரனைச்
    சரண டைந்தார் ஏசு!

சின்னச் சின்னக் கதைகள் மூலம்
    சிந்தை தூய்மை செய்தார் - மக்கள் 
சிந்தை எல்லாம் நிறைந்தார் - யாரும் 
    என்றும் கர்த்தர் வழியில் செல்ல
ஏற்ற வழியைச் சொன்னார் - அவரைப்
    போற்றும் வழியைச் சொன்னார்!

என்ன பாவம் செய்த போதும் 
    ஏசு பொறுமை காத்தார் - அவர்
மாசு மருவைத் தீர்த்தார் - ஆழ்ந்த 
    அன்பால் பாவம் செய்த பேரை 
ஆண்ட வாமன் னிப்பாய் - என்று 
    வேண்டிக் கொண்டார் ஏசு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com